ஈரோடு அருகே கோரம்-யானை தாக்கி 60 வயது மூதாட்டி பலி
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கடம்பூர் வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி 60 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்தப் பெண்மணியின் பெயர் தேவியம்மாள். யானை தாக்கிய படுகாயத்துடன் அவரது உடலை கடம்பூர் வனத்திலிருந்து வனத்துறையினர் மீட்டுள்ளனர்.
இந்தப் பெண்மணி, வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை. காட்டுக்குள் கால்நடைகளோடு சென்றிருந்தார் அவர். இதையடுத்து அவரை வனத்துறையினர் தேடி வந்தனர். இன்று காலை அவரது உடல் கிடைத்து மீட்கப்பட்டது.












Click it and Unblock the Notifications