பாகிஸ்தானிலிருந்து ரயில் மூலம் வந்த ரூ. 500 கள்ள நோட்டுக் குவியல்
அட்டாரி (இந்திய-பாகிஸ்தான் எல்லை): பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்த ரயிலில் ரூ. 500 கள்ள நோட்டுக்கள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டாரி, நிலையத்தில் வைத்து இந்த கள்ள நோட்டுக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அந்த ரயில் சரக்கு ரயிலாகும். அதில் கள்ள ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெட்டியில், ரூ. 9 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. கூடவே ஹெராயின் போதைப் பொருளும் இருந்தது. அதன் மதிப்பு ரூ. 5 கோடியாகும்.
இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்க பாகிஸ்தானிலிருந்து பெருமளவில் கள்ள ரூபாய் நோட்டுக்கள் அனுப்பி வைக்கப்படுவதாக நீண்ட காலமாகவே புகார் உள்ளது. ஆனால் தற்போது பாகிஸ்தானிலிருந்து அனுப்பப்பட்ட கள்ள நோட்டுக்கள் சிக்கியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.












Click it and Unblock the Notifications