For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓட்டு: கோவா கிருஸ்துவ தலைர்களுக்கு பாஜக வலைவீச்சு

By Chakra
Google Oneindia Tamil News

Arti Mehra
பனாஜி: கோவா மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற கத்தோலிக்க கிருஸ்துவர்களின் ஆதரவு மிக மிக முக்கியம் என்பதால் அந்த மதத் தலைவர்களுடன் பேச்சு நடத்த பாஜக தலைமை முடிவு செய்துள்ளது.

இதற்கான முதல் கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தும் பொறுப்பு பாஜக தேசியச் செயலாளரும் டெல்லி நகர முன்னாள் மேயருமான ஆர்த்தி மெஹ்ராவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பனாஜி வந்துள்ள ஆரத்தி மெஹ்ரா, கத்தோலிக்க மதத் தலைவர்களை சந்திக்க ஆரம்பித்துள்ளார்.

மேலும் தலைமை மறை மாவட்ட ஆயரையும் சந்திக்க கோவா மாநில பாஜக தலைவர்கள் தயார் என்றும், கத்தோலிக்கத் தலைமை விரும்பினால் கட்சியின் தேசியத் தலைவரான நிதின் கட்காரியே கோவாவுக்கு வந்து பேச்சு நடத்தத் தயார் என்றும் பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆர்த்தி கூறுகையில், கோவாவில் பாஜக கூட்டணிக்கு மேலும் 5% வாக்குகள் கிடைததால் அங்கு ஆட்சியைப் பிடித்துவிட முடியும். ஆனால், கிருஸ்துவர்களிடம் காங்கிரஸ் கட்சி செய்யும் தவறான பிரசாரம் காரணமாகவே பாஜகவை நெருங்க அவர்கள் அஞ்சுகிறார்கள். இதனால் தான் அவர்களிடமே நேரடியாகப் பேசுவது என்ற முடிவை கட்சித் தலைமை எடுத்துள்ளது.

கோவாவில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது. இங்கு கிருஸ்துவ மக்களின் ஆதரவு இல்லாததால் பாஜக ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற தைரியத்தில் காங்கிரஸ் அரசு தொடர்ந்து தவறுகளைச் செய்கிறது.

பாஜக அரசியல் கட்சிதானே தவிர, மதவெறிக் கட்சி அல்ல, நாட்டின் வளர்ச்சியும் பாதுகாப்பும்தான் எங்கள் குறிக்கோளே தவிர எந்த சிறுபான்மையினருக்கு நாங்கள் எதிரியல்ல என்றார் ஆர்த்தி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X