உடனடியாக அமலுக்கு வந்தது அமெரிக்க விசா கட்டண உயர்வு!

இந்த புதிய சட்டத்தால் தனிப்பட்ட முறையில் இந்திய பணியாளர்களுக்கு லட்சக்கணக்கில் அதிக செலவு ஏற்பட்டுள்ளது.
விசா கட்டண உயர்வு குறித்த புதிய சட்டத் திருத்தத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.
இதைத் தொடர்ந்து இந்த புதிய கட்டண முறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இந்த ஒப்பந்தம் 2014, செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும். அமெரிக்க - மெக்சிகோ எல்லைப் பகுதியை வலுப்படுத்துவதற்காக ஆகும் ரூ 3000 கோடி செலவை ஈடுகட்டுவதற்காகவே விசா கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது அமெரிக்கா.
ஏற்கெனவே இதுதொடர்பாக புதிய சட்டம் இயற்றியபோதே இந்திய, அமெரிக்க நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்திய அரசும் கவலை தெரிவித்தது. ஆனால் இவை எதையும் அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. ஒபாமா நிர்வாகம் உடனடியாக விசா கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது.
புதிய சட்டத்தின்படி எச்-1பி விசாவுக்கு ரூ50 ஆயிரமும், எல்-1ஏ மற்றும் எல்-1பி விசாக்களுக்கு ரூ 1 லட்சம் வரையிலும் கட்டணம் செலுத்த வேண்டிவரும்.












Click it and Unblock the Notifications