பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு-நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு

Subscribe to Oneindia Tamil

Babri Mosque Demolition
டெல்லி: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், நாடு முழுவதும் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், ஏ.கே. ஆண்டனி ஆகியோருடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.

அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

இதனால் உத்தரப் பிரதேதம் உள்பட நாடு முழுவதும் ஏற்படும் சட்டம், ஒழுங்கு பிரச்சனையை சமாளிக்க முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தனது மாநிலத்தில் நிலைமை சமாளிக்க 50,000 துணை ராணுவப் படை வீரர்களை அனுப்ப வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தீர்ப்பு வெளியாவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன் உததரப் பிரதேசத்துக்கு போதிய படைகள் அனுப்ப்படும் என்று தெரிகிறது. அதே போல நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது.

அதே போல மாநில அளவில் பாதுகாப்பை பலப்படு்த்த உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி இப்போதே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளார். இதே போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு மற்ற மாநிலங்களும் கேட்டுக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+