90 சதவீத தமிழர்கள் மறுகுடியமர்த்தம் செய்யப்பட்டு விட்டனர்-சொல்கிறார் பசில்

Subscribe to Oneindia Tamil

Basil Rajapakse
டெல்லி: முள்வேலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 90 சதவீத தமிழர்கள் மறுகுடியமர்த்தப்பட்டு விட்டதாக கூறியுள்ளார் ராஜபக்சேவின் தம்பியும், பொருளாதார வளர்ச்சி அமைச்சருமான பசில் ராஜபக்சே.

இலங்கையிலிருந்து தன்னந்தனியாக இன்று டெல்லி வந்தார் பசில். மத்திய அமைச்சர் குமாரி ஷெல்ஜாவை அவர் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த தமிழர்களில் 90 சதவீதம் பேர் மறு குடியமர்த்தம் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

முன்னதாக பசிலுடன், அவரது தம்பி கோத்தபயாவும் வருவதாக இருந்தது. ஆனால் கடைசியில் பசில் மட்டுமே வந்துள்ளார்.

விரைவில் இந்தியாவிலிருந்து ஒரு குழு இலங்கை செல்லவுள்ளது. இதுதொடர்பாக சமீபத்தில் வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தி்ச சென்றார். இந்த நிலையில் பசில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+