இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு-சிபிஎம் தலைவர் டி.கே.ரங்கராஜன் பங்கேற்பு
மதுரை: கொழும்பில், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறும் மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் பங்கேற்றுள்ளார்.
இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு ஆகஸ்ட் 27, 28, 29 ஆகிய தேதிகளில் கொழும்பு நகரில் நடைபெறுகிறது.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பை ஏற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக அவர் கொழும்பு சென்றுள்ளார். இந்த தகவலை சிபிஎம் மாநிலக் குழு அலுவலகம் உறுதி செய்துள்ளது.
ஈழப் போர் முடிவுக்குப் பின்னர் தமிழகத்திலிருந்து திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய மூன்று அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் கொழும்பு சென்று தமிழர்நிலையைப் பார்வையிட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது சிபிஎம் தலைவர் ரங்கராஜன் இலங்கை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications