பணம் உள்ளவரை கேபிக்கு ராஜமரியாதை தரும் ராஜபக்சே அரசு! - ஜேவிபி

Subscribe to Oneindia Tamil

KP
கொழும்பு: கே.பி.யிடம் கப்பல்களும் பணமும் இருக்கும்வரை அவரது உயிருக்கு அரசால் எதுவித ஆபத்தும் ஏற்படாது. ராஜபக்சே அவருக்கு ராஜமரியாதை தருவார் என்று ஜேவிபி எம்.பி. அநுரகுமார திஸாநாயக்க நேற்றுக் கூறினார்.

பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் கூறுகையில்,

"அரசின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க முடியாத நிலையில் அரசுடன் இணைந்துள்ள கட்சிகள் உள்ளன.

ஜாதிக ஹெல உறுமய கட்சி அரசு செய்யும் செயல்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசுகிறது.

கே.பி. அரசின் பிடியில் இருக்கின்றார். இத்தனைக்கும் அவரைத் தொடர்ந்து காவலில் வைத்திருப்பதற்கான நீதிமன்ற உத்தரவு கூட பெறப்படவில்லை. அவர் எந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அரசு நாட்டு மக்களுக்குக் கூறவேண்டும்.

இந்த விடயம் தொடர்பாக நான் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோதும் அரசால் பதில் கூற முடியவில்லை.

எப்படி இருந்தாலும் கே.பியிடம் கப்பல்களும், புலிகளின் பெரும் நிதியும் இருக்கும்வரை அவரது உயிருக்கு எதுவித ஆபத்தும் ஏற்படாது. ராஜபக்சே அரசு ராஜமரியாதை தந்து காப்பாற்றும் என்பது எமக்குத் தெரியும்", என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+