சட்டிஸ்கர்-நக்சலைட் தாக்குதலில் 5 பாதுகாப்புப் படையினர் பலி
Subscribe to Oneindia Tamil

எல்லைப் பாதுகாப்புப் படை, மாநில போலீஸார் ஆகியோர் இணைந்த கூட்டுப் படையினருக்கும், நக்சலைட்களுக்கும் இடையே புஸ்கி என்ற கிராமத்தில் இன்று காலை 5 மணி முதல் கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டுள்ளது.
இதில் இதுவரை 5 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு வீரர் காயமடைந்துள்ளார். அந்தப் பகுதிக்குக் கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சட்டிஸ்கரில் நடந்த நக்சலைட் தாக்குதலில் சிக்கி எல்லைப் பாதுகாப்புபப் படையினர் கொல்லப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications