'கேட் கீப்பர்' பெண்ணை 'அழைத்த' ரயில்வே போலீஸ்காரர்!
சென்னை: கேட் கீப்பராகப் பணியாற்றி வரும் விதவைப் பெண்ணை உல்லாசமாக இருக்க வருமாறு அழைத்ததாக ரயில்வே போலீஸ்காரர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கூடுவாஞ்சேரி அருகில் உள்ள ரெயில்வே கிராசிங்கில் கேட் கீப்பராக பணி புரிந்து வருபவர் சரோஜா (40). இவர் கணவரை இழந்தவர். இவர் தாம்பரம் ரயில்வே போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில், நான் இரவு 8 மணியளவில் பணியில் இருந்தபோது, ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் சையது கவுஸ் (30) என்னை உல்லாசமாக இருக்க அழைத்தார். அசிங்கமான வார்த்தைகளை பேசினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் விசாறணை மேற்கொண்டுள்ளனர். ரயில்வே போலீஸ்காரர் என்பதால் கவுஸ் மீது அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க முடியாது, எனவே விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. புகார் நியாயமானதாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications