விஜயகாந்த் சொந்த கல்லூரியில் கூட முதல்வராக முடியாது-நெப்போலியன்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டிக்கு வந்த நெப்போலியன் அங்கு திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பின்னர் அவர் பேசுகையில்,
பொதுவாக சினிமா நடிகர்களை பார்பதற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் வரும். திருமண விழா உள்ளிட்ட விசேஷங்களில் கலந்து கொள்ளும் போது கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த மாதிரியான கூட்டங்களை பார்த்ததால்தான் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தமிழகத்தில் அடுத்த முதல்வர் நான் என கூறியிருப்பார்.
தே.மு.தி.க., 2005ல் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியை பிடித்தது. வரும் சட்டசபை தேர்தலில் விஜயகாந்த், நாங்கள் நான்கு அல்லது பத்து தொகுதியை பிடிப்போம் என பேசினால் அது ஏற்புடையாதக இருக்கும்.
அதை விட்டு தமிழகத்தில் அடுத்து நான் தான் முதல்வர் என பேசி வருவது காமெடியானது. அவருடைய கல்லூரியிலேயே அவர் முதல்வராவது முடியாது ஏனென்றால் கல்வித்தகுதி வேண்டும் என்றார் நெப்போலியன்.












Click it and Unblock the Notifications