சொத்து குவிப்பு: ஜெ மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கில் ஆவணங்களை மீண்டும் முழுவதுமாக மொழி பெயர்க்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வருமானத்தை மீறி சொத்து சேர்த்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான வழக்கு விசாரணை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்குத் தொடர்பான ஆவணங்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் தவறுகள் இருப்பதாகவும் இதனால் அதை முழுவதுமாறு மீண்டும் மொழி பெயர்க்க வேண்டும் என்றும் ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.

இதை நிராகரித்த தனி நீதிமன்றம், தவறுகளை மட்டும் திருத்தலாம் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சுபாஷ் அடி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா தரப்பில் வழக்கறஞர்கள் உதய் ஹொள்ளா, நவநீதகிருஷ்ணன் ஆகியோர், விசாரணை சுதந்திரமாகவும் நேர்த்தியான முறையிலும் நடக்க ஆவணங்களை தவறின்றி மொழி பெயர்ப்பு செய்வது மிகவும் அவசியம்.

சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்துவதில் இது மிக அவசியமாக உள்ளது என்றனர்.

இதைத் தொடர்ந்து விசாரணையை வரும் 7ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+