நெல்லை அருகே மல்லிகைக் தோட்டத்தில் பண்ணையார் கழுத்தறுத்துக் கொலை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டம், மூன்றடைப்பு மல்லிகை தோட்டத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பண்ணையார் ஓருவர் படுகொலை செய்யப்பட்டார்.

பணகுடி அருகே உள்ள பழவூரை சேர்ந்தவர் பிரமநாயகம் மகன் குருசாமி. இவர் தற்போது குடும்பத்துடன் நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பண்ணை தோட்டம் மூன்றடைப்பு அருகே உள்ளது. அதி்ல் மல்லிகை பயிரிட்டுள்ளார். சித்த மருத்துவம் படித்துள்ளதால் அந்த பகுதி மக்களுக்கு மருத்துவமும் செய்துள்ளார்.

தினமும் காலை இவரது மனைவி ராமையன்பட்டியில் இருந்து தோட்டத்துக்கு வருவார். மாலையில் வீட்டுக்கு திரும்பி விடுவார். நேற்று மாலை வீடு திரும்பியவர், இரவில் தனது கணவர் செல்போனுக்கு பேசியுள்ளார். ஆனால் செல்போன் எடுக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த பகவதி இன்று காலை பக்கத்து வாயல்காரரை போனில் அழைத்து தங்கள் தோட்டத்துக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் குருசாமி பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மூன்றடைப்பு சப்-இன்ஸ்பெக்டர் நிசார் தலைமையில் போலீசார் அங்கு சென்று குருசாமி உடலை மீட்டனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் அந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+