5 தொகுதிகள் தந்தா யாருடனும் கூட்டணி-சுப்பிரமணிய சாமி
சென்னை: வரும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 5 தொகுதிகள் வழங்கும் கட்சியுடன் கூட்டணிக்குத் தயார் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், கூட்டணிக்காக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் நான் பேரம் பேசப் போவதில்லை.
அதே நேரத்தல் அவர்களாகவே முன்வந்து கூட்டணி அமைத்தால் நானும் தயார். ஜனதா கட்சிக்கு யார் 5 சீட் தந்தாலும் வழங்கினாலும் அவர்களுடன் கூட்டணி சேரத் தயார் என்றார்.
ராசா மீது வழக்கு-சுப்ரீம் கோர்ட்டை நாடும் சாமி:
முன்னதாக டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ராசாவுக்கு எதிராக வழக்குத் தொடர பிரதமர் அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளேன்.
இந்த விவகாரம் தொடர்பாக ராசா மீது வழக்குத் தொடர அனுமதி கோரி பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட மனுவுக்கு இரண்டு ஆண்டுகளாக பதில் வரவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications