வங்கக் கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்தம்-தமிழகத்தில் மழை பெய்யும்
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சில நாள் இடைவெளிக்குப் பின்னர் கடந்த 2 நாட்களாக சென்னையில் வெயில் அடித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் மேக மூட்டமாகியுள்ளது. நேற்று லேசான மழை பெய்தது.
இதற்கு வங்கக் கடலி்ல ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையே காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் கூறுகையில், தெற்கு ஒரிசா மற்றும் வட ஆந்திரா இடையேயான மேற்கு மத்திய வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அதன் காரணமாக வளிமண்டலத்தில் சுழற்சி ஏற்பட்டு உள்ளதாகவும் இதனால் சென்னை மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவுப்படி, அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications