இஸ்லாமிய மக்களுக்கு அரணாக காங். அரசு செயல்படுகிறது: ஜி.கே.வாசன்
நெல்லை: இஸ்லாமிய மக்களுக்கு அரணாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என்று நெல்லையில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு விழாவில் மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
நெல்லையில் ஐ.என்.டி.யூ.சி. சார்பில் குடும்ப விழா, இப்தார் நோன்பு திறப்பு விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா நேற்று மாலை நடந்தது. இப்தார் நோன்பு திறப்பு விழாவுக்கு உமாபதி சிவன் தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் அறக்கட்டளை செயலாளர் ராஜேஷ், சுத்தமல்லி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பேசியதாவது,
புனித ரமலான் மாதத்தில் இறைவனை மனதில் வேண்டி ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். மத நல்லிணக்க விழாவாக இப்தார் நோன்பு திறப்பு விழா அமைந்துள்ளது.
சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட அரசாக காங்கிரஸ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய மக்களுக்கு அரணாக, தூணாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. 2010-11-ம் ஆண்டு பட்ஜெட்டில் சிறுபான்மையின மக்களுக்கு ரூ.2,600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகம் ஆகும்.
முன்னுரிமை கடன்கள் வழங்குவதில் 15 சதவிகிதம் சிறுபான்மையினருக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications