திருச்சி சட்ட கல்லூரி மாணவர்கள் மோதல்-4 பேர் காயம்
திருச்சி: திருச்சி சட்ட கல்லூரியில் ராகிங் பிரச்சனை-யில் 2 -ம் ஆண்டு மாணவர்கள் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி சட்டக் கல்லூரியில் 2 ம் ஆண்டு பயிலும் ரமேஷ், செந்தில், சக்தி, செல்வராஜ் ஆகிய நால்வர் கல்லூரி நூலகத்துக்குச் சென்ற போது, அங்கிருந்த 4 ம் ஆண்டு மாணவர்கள் 10 பேர் அவர்களை வழி மறித்து, சீனியர் மாணவர்களாகிய தங்களை கண்டவுடன் வணக்கம் செலுத்தாமல் செல்லக் கூடாது எனக் கூறி ராகிங் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்பு, 2 -ம் ஆண்டு மாணவர்களை 4 -ம் ஆண்டு மாணவர்கள் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில், 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படு காயமடைந்த மாணவர்கள் கொடுத்த புகாரின் பேரில், ராகிங் தொடர்பாக 4- ம் ஆண்டு மாணவர்களிடம் திருச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications