திமுக ஆட்சிக்கு எதிரான உண்மைகள்: செப்-15ல் வெளியிடுவேன்: வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
மதிமுக மதுரை மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் குரு திராவிட செல்வனின் அஞ்சலி கூட்டம் பரவையில் நடந்தது.
அதில் பேசிய வைகோ, இந்த ஆட்சியால் ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு வார இதழ் திமுக பற்றி கருத்து தெரிவித்திருந்ததால் அந்த வார இதழ் தமிழகம் முழுவதும் முடக்கப்பட்டிருக்கிறது. அது விற்பனையாகாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.
திமுகவின் ஆட்சி மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். விலைவாசி, மின் தட்டுப்பாட்டினால் கடும் கோபம் கொண்டிருக்கிறார்கள். இதனால் ஆட்சி மாற்றம் காண விரும்புகிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் தோற்கும்.
வரும் செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று இந்த ஆட்சிக்கு எதிரான சில உண்மைகளை வெளியிடுவேன்.
கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையை உடைக்க திட்டமிட்டிருக்கிறது. அப்படிச்செய்தால் கேரள மக்கள் பல விபரீதங்களை சந்திக்க நேரிடும் என்றார்.












Click it and Unblock the Notifications