இலங்கை கடற்படையினர் தாக்கி 8 தமிழக மீனவர்கள் காயம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 8 தமிழக மீனவர்கள் காயமடைந்தனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 120 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எட்டு பேர் கொண்ட மீனவர் குழுவை இலங்கை கடற்படையினர் வந்து மறித்தனர். பின்னர் அவர்களை துப்பாக்கியின் பின்புறமாக தாக்கி விரட்டியடித்தனர்.
மேலும் மீனவர்கள் வைத்திருந்த இறால் மீன்களை எடுத்துக் கொண்ட கடற்படையினர், மீனவர்களின் வலைகளையும் அறுத்து விட்டுச் சென்றனர்.












Click it and Unblock the Notifications