விநாயகர் சதுர்த்தி-தமிழகம், புதுச்சேரியில் கொண்டாடப்பட்டது
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள வீடுகளில் விநாயகர்சிலைகளை வைத்து மக்கள் பூஜை நடத்தி விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடினர். இதன் பொருட்டு தமிழகம் முழவதும் விநாயகர் சிலைகள் விற்பனை களை கட்டியிருந்தது. களிமண்ணால் ஆன சிலைகளை மட்டுமே பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தமிழகத்தின் முக்கிய விநாயகர் கோவிலான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெற்றன.
திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முக்குருணி விநாயகர் கோவில் உள்ளிட்ட இடங்களிலும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. விதம் விதமான பிரசாதங்களும் விநாயகருக்குப் படைக்கப்பட்டன.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் அமெரிக்க வைரம் பொருத்தப்பட்ட கிரீடம் சூட்டப்பட்டு காட்சி அளித்தார் விநாயகர்.மேலும், 9 கிலோ தங்கத்தால் ஆன கவசமும் அணிவிக்கப்பட்டது.
27 வகை பொருட்களுடன் சிறப்பு அபிஷேகமும் நடத்தப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஐந்தாம் நாளின்போது இவை அனைத்தும் கடல் மற்றும் ஏரி, குளங்களில் கரைக்கப்படும்.












Click it and Unblock the Notifications