கோர்ட்டில் ஆஜராகுமாறு நிறைமாத கர்ப்பிணிகளை கட்டாயப்படுத்த முடியாது-உயர்நீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நிறைமாத கர்ப்பிணிகளாக இருக்கும் பெண்களை வழக்குக்காக கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்று டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வரதட்சணைக் கொடுமை வழக்கில் ஆஜராகாத, நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த கைது வாரண்ட்டை டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
அப்போது நீதிபதி கெளபா பிறப்பித்த உத்தரவில், கீழ்க் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவு மிகவும் வேதனை தருகிறது. ஆறு மாத கர்ப்பமாக உள்ள பெண்ணை நேரில் வந்து ஆஜராகுமாறு கூறியிருப்பது மிகவும் தவறானதாகும்.
கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிப்பது, நேரில் ஆஜராகுமாறு கட்டாயப்படுத்துவது போன்றவை சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications