For Daily Alerts
Just In
விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்து-3 பேர் பலி
பாகூர் (ஜார்க்கண்ட்): ஜார்க்கண்ட் மாநிலம், பாகூர்-கொட்டா மாவட்ட எல்லைப் பகுதியில் இந்திய விமானப்படையின் சேத்தக் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில், வி்மானி, துணை விமானி மற்றும் ஒருவர் உயிரிழந்தனர்.
இந்த ஹெலிகாப்டர் மேற்கு வங்க மாநிலம் கலைகுண்டா விமானப்படை நிலையத்திலிந்து பக்தோக்ரா ஏர்பேஸுக்குப் போய்க் கொண்டிருந்தது. அப்போது மோசமான வானிலைகாரணமாக ஜார்க்கண்ட் மாநிலத்திற்குள் விழுந்து நொறுங்கியது.
நேற்று மாலை 4 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக ஜார்க்கண்ட் மாநில டிஜிபி தெரிவித்துள்ளார்.
Comments
Story first published: Sunday, September 12, 2010, 12:15 [IST]