தலித் பிரிவுகளிடையே கடும் மோதல்-10 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: தியாகி இம்மானுவேல் சேகரன் குருபூஜைக்காக வந்து கொண்டிருந்த தலித்களுக்கிடையே கடும் மோதல் மூண்டது. இதில் 10 பேர் படுகாயமடைந்தனர்.

தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினம் நேற்று குரு பூஜையாக பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு தலித் பிரிவினர் பரமக்குடியில் குவி்ந்தனர். இதனால் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது பரமக்குடி பர்மா காலனிப் பகுதியில் புதிய தமிழகம் கட்சியினரும், இன்னொரு தலித் கட்சியினரும் வந்தனர். அந்த பகுதியில் தேவர் சமூகத்தினர் அதிகம் வசிப்பதால் அங்கு பட்டாசுகளை வெடிக்க போலீஸார் தடை விதித்திருந்தனர்.

ஆனால் இதுதொடர்பாக தலித் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு பிரிவினர் பட்டாசு வெடிப்போம் என்றனர், இன்னொரு தரப்போ வெடிக்க வேண்டாம் என கோரினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் மூண்டு விட்டது.

இதில் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வீடுகளைத் தாக்கத் தொடங்கினர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர், அவர்களில் மூவர் குழந்தைகள் காயமடைந்தனர்.

மேலும், இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள், மூன்று கான்ஸ்டபிள்களுக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி அனைவரையும் கலைத்து விரட்டினர். இம்மானுவேல் சேகரனின் குரு பூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 மாவட்ட எஸ்.பிக்கள் தலைமையில், 1500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+