14ம் தேதி சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்கிறார் அர்ஜூன் முண்டா
Subscribe to Oneindia Tamil
ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவியேற்றுள்ள அர்ஜூன் முண்டா, செப்டம்பர் 14ம் தேதியன்று சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வருகிறார். இதன் மூலம் தனது ஆட்சிக்கான பெரும்பான்மை பலத்தை அவர் நிரூபிக்கிறார்.
நேற்று ஜார்க்கண்ட் முதல்வராக முண்டா பொறுப்பேற்றுக் கொண்டார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சியமைத்துள்ளது.
ஒரு வாரத்திற்குள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு முண்டாவுக்கு ஆளுநர் எம்.ஓ.எச். பாரூக் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து செப்டம்பர் 14ம் தேதி நம்பிக்கை வாக்கு கோருகிறார் முண்டா. இதற்காக சிறப்பு சட்டசபைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
முண்டா தலைமையில் நடந்த முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் இது முடிவெடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications