காஷ்மீரில் மீண்டும் பெரும் வன்முறை-காலவரையற்ற ஊரடங்கு அமல்

ரம்ஜான் பண்டிகையையொட்டி காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று காஷ்மீரில் ரம்ஜான் கொண்டாடப்பட்டது. அப்போது பெரும் கலவரம் வெடித்தது.
அமைதியாக நடந்து வந்த ரம்ஜான் கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில், ஸ்ரீநகரில் பெரும் கலவரம் மூண்டது. பிரிவினைவாத தலைவர் மிர்வைஸ் உமர் பாருக் ஈத்கா மைதானத்திலிருந்து லால் செளக் வரை பேரணி நடத்த விடுத்திருந்த அழைப்பு வன்முறையில் முடிந்தது.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் வன்முறையில் குதித்தனர். முதலில் ஹஸ்ரத்பால் தர்காவுக்கு வெளியே இருந்த போலீஸ் போஸ்ட் தீவைத்து கொளுத்தப்பட்டது. பின்னர் குற்றப் பிரிவு தலைமையகம், மாநில அரசின் மின்துறை அலுவலகம் ஆகியவையும் தீவைத்து எரிக்கப்பட்டது.
அரசு அலுவலகங்களையும், போலீஸ் நிலைகளையும் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் ஸ்ரீநகரில் முழு அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரம் பிற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்த வன்முறைக்கு பிரிவினைவாதிகளே காரணம் என முதல்வர் உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுபோன்ற வன்முறைகள் அமைதிக்கான நடவடிக்கைகளை சீர்குலைத்து விடுகின்றன. இப்படி இருக்கும்போது அமைதி எப்படி வரும். பிரிவினைவாத தலைவர்கள்தான் போராட்டங்களை தூண்டி விடுகின்றனர் என்றார்.
இதற்கிடையே, காஷ்மீர் நிலை குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடக்கவுள்ளது. அப்போது காஷ்மீருக்கான தீர்வு குறித்து விவாதிக்கப்படவுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமலில் உள்ள பாதுகாப்புப் படையினரை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இதற்கு ராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாம். ஜம்மு காஷ்மீர் மாநில அரசு தனது தோல்வியை ராணுவத்தின் மீது திணிக்க முயல்கிறது. பாதுகாப்புப் படையினரை (ராணுவத்தினரை) விலக்கிக் கொள்வது என்பது ராணுவம் தோல்வி அடைந்து விட்டதாக மத்திய அரசே ஒப்புக் கொள்வதாக அர்த்தமாகி விடும் என ராணுவம் எச்சரித்துள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications