காஷ்மீரில் மீண்டும் பெரும் வன்முறை-காலவரையற்ற ஊரடங்கு அமல்

ரம்ஜான் பண்டிகையையொட்டி காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று காஷ்மீரில் ரம்ஜான் கொண்டாடப்பட்டது. அப்போது பெரும் கலவரம் வெடித்தது.
அமைதியாக நடந்து வந்த ரம்ஜான் கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில், ஸ்ரீநகரில் பெரும் கலவரம் மூண்டது. பிரிவினைவாத தலைவர் மிர்வைஸ் உமர் பாருக் ஈத்கா மைதானத்திலிருந்து லால் செளக் வரை பேரணி நடத்த விடுத்திருந்த அழைப்பு வன்முறையில் முடிந்தது.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் வன்முறையில் குதித்தனர். முதலில் ஹஸ்ரத்பால் தர்காவுக்கு வெளியே இருந்த போலீஸ் போஸ்ட் தீவைத்து கொளுத்தப்பட்டது. பின்னர் குற்றப் பிரிவு தலைமையகம், மாநில அரசின் மின்துறை அலுவலகம் ஆகியவையும் தீவைத்து எரிக்கப்பட்டது.
அரசு அலுவலகங்களையும், போலீஸ் நிலைகளையும் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் ஸ்ரீநகரில் முழு அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரம் பிற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்த வன்முறைக்கு பிரிவினைவாதிகளே காரணம் என முதல்வர் உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுபோன்ற வன்முறைகள் அமைதிக்கான நடவடிக்கைகளை சீர்குலைத்து விடுகின்றன. இப்படி இருக்கும்போது அமைதி எப்படி வரும். பிரிவினைவாத தலைவர்கள்தான் போராட்டங்களை தூண்டி விடுகின்றனர் என்றார்.
இதற்கிடையே, காஷ்மீர் நிலை குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடக்கவுள்ளது. அப்போது காஷ்மீருக்கான தீர்வு குறித்து விவாதிக்கப்படவுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமலில் உள்ள பாதுகாப்புப் படையினரை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இதற்கு ராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாம். ஜம்மு காஷ்மீர் மாநில அரசு தனது தோல்வியை ராணுவத்தின் மீது திணிக்க முயல்கிறது. பாதுகாப்புப் படையினரை (ராணுவத்தினரை) விலக்கிக் கொள்வது என்பது ராணுவம் தோல்வி அடைந்து விட்டதாக மத்திய அரசே ஒப்புக் கொள்வதாக அர்த்தமாகி விடும் என ராணுவம் எச்சரித்துள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications