Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஷ்மீரில் மீண்டும் பெரும் வன்முறை-காலவரையற்ற ஊரடங்கு அமல்

Subscribe to Oneindia Tamil

Kashmir
ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் மீண்டும் கலவரமும், வன்முறையும் வெடித்ததைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ரம்ஜான் பண்டிகையையொட்டி காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று காஷ்மீரில் ரம்ஜான் கொண்டாடப்பட்டது. அப்போது பெரும் கலவரம் வெடித்தது.

அமைதியாக நடந்து வந்த ரம்ஜான் கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில், ஸ்ரீநகரில் பெரும் கலவரம் மூண்டது. பிரிவினைவாத தலைவர் மிர்வைஸ் உமர் பாருக் ஈத்கா மைதானத்திலிருந்து லால் செளக் வரை பேரணி நடத்த விடுத்திருந்த அழைப்பு வன்முறையில் முடிந்தது.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் வன்முறையில் குதித்தனர். முதலில் ஹஸ்ரத்பால் தர்காவுக்கு வெளியே இருந்த போலீஸ் போஸ்ட் தீவைத்து கொளுத்தப்பட்டது. பின்னர் குற்றப் பிரிவு தலைமையகம், மாநில அரசின் மின்துறை அலுவலகம் ஆகியவையும் தீவைத்து எரிக்கப்பட்டது.

அரசு அலுவலகங்களையும், போலீஸ் நிலைகளையும் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால் ஸ்ரீநகரில் முழு அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரம் பிற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த வன்முறைக்கு பிரிவினைவாதிகளே காரணம் என முதல்வர் உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுபோன்ற வன்முறைகள் அமைதிக்கான நடவடிக்கைகளை சீர்குலைத்து விடுகின்றன. இப்படி இருக்கும்போது அமைதி எப்படி வரும். பிரிவினைவாத தலைவர்கள்தான் போராட்டங்களை தூண்டி விடுகின்றனர் என்றார்.

இதற்கிடையே, காஷ்மீர் நிலை குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடக்கவுள்ளது. அப்போது காஷ்மீருக்கான தீர்வு குறித்து விவாதிக்கப்படவுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமலில் உள்ள பாதுகாப்புப் படையினரை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இதற்கு ராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாம். ஜம்மு காஷ்மீர் மாநில அரசு தனது தோல்வியை ராணுவத்தின் மீது திணிக்க முயல்கிறது. பாதுகாப்புப் படையினரை (ராணுவத்தினரை) விலக்கிக் கொள்வது என்பது ராணுவம் தோல்வி அடைந்து விட்டதாக மத்திய அரசே ஒப்புக் கொள்வதாக அர்த்தமாகி விடும் என ராணுவம் எச்சரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+