மெரீனா கடலில் குளித்த 2 பேர் பலி: ஹெலிகாப்டரில் தேடப்படும் உடல்கள்
சென்னை: சென்னை மெரீனா கடலுக்கு குளிக்கச் சென்ற இருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். அவர்கள் உடலைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அமைந்த கரையைச் சேர்ந்தவர் பெயிண்டர் மதன் குமார் (23). இவர் தன் நண்பர்கள் முரளிகுமார், விஜய் ஆகியோருடன் அண்ணாசதுக்கம் பின்புறம் உள்ள கடலுக்கு நேற்று மாலை சென்றார். கடலைப் பார்த்ததும் குளிக்க நினைத்து அவர்கள் மூவரும் கடலுக்குள் இறங்கினர். அவர்கள் குளித்துக் கொண்டிருக்கையில் வந்த ராட்சத அலை ஒன்று மதன் குமாரை இழுத்துச் சென்றது.
அலையின் வேகத்தில் அவர் இறந்தார். ஆனால் அவர் உடல் இன்னும் கிடைக்கவில்லை. போலீசார் அவரது உடலைத் தேடி வருகின்றனர்.
இதே போன்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பபின்குமார் (16) என்பவரும் மெரீனா கடலில் குளிக்கும்போது கடலில் மூழ்கி உயிர் இழந்தார். இவரின் உடலைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பபின் குமார் சென்னை முகப்பேரில் தங்கி இருந்தார். அவர் ஒரு பிளாஸ்டிக் கம்பெனியில் பணி புரிந்து வந்தார்.
இந்த சம்பவங்கள் குறித்து அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் உடலைத் தேடும் பணியில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.