சல்மான் கான் குடும்பம் தேசபக்தி நிறைந்த குடும்பம்-பால் தாக்கரே பாராட்டு

2 நாட்களுக்கு முன்புதான் சல்மான் கானை கடுமையாக விமர்சித்திருந்தது சிவசேனா. மும்பை தீவிரவாத தாக்குதல் குறித்து பாகிஸ்தான் டிவிக்கு அவர் அளித்த பேட்டியைத் தொடர்ந்து அவரை கடுமையாக சாடியிருந்தது சிவசேனா. இந்த நிலையில் தற்போது அப்படியே பல்டி அடித்து சல்மான் கானையும், அவரது குடும்பத்தினரையும் பாராட்டியுள்ளது.
இதுகுறித்து தனது சாம்னா இதழில் பால் தாக்கரே எழுதியுள்ள தலையங்கத்தில்,
சல்மான் கானுக்கு எதிராக தேவையில்லாமல் கோபத்தைக் கொட்ட வேண்டிய காரணம் எங்களுக்கு இல்லை. அவரது குடும்பம் தேச பக்தி மிக்கது. உண்மையான தேசப்பற்றுடன் உள்ளவர்கள் சல்மான் குடும்பத்தினர்.
தனது கருத்துக்களுக்கு வந்த எதிர்ப்பைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார் சல்மான். தனது பேச்சுக்கு நாட்டில் எழுந்த கொதிப்பை அவர் உணர்ந்துள்ளார். ஆனால் அவை சாதாரண மக்களிடமிருந்து வந்ததல்ல, மாறாக பெரும் பணக்காரர்கள் எழுப்பிய குரல் என்பதையும் உணர்ந்துள்ளார்.
ஷாருக் கான், போல பிடிவாதக்காரராக சல்மான் கான் இல்லை. அது நல்ல விஷயம் என்று கூறியுள்ளார் பால் தாக்கரே.












Click it and Unblock the Notifications