சபாநாயகர் ஆவுடையப்பன் 18 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம்: திருவனந்தபுரத்திலிருந்து கிளம்பினார்
நெல்லை: கென்ய தலைநகர் நைரோபியில் 56-வது காமல்வெல்த் பாராளுமன்ற மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழக பிரதிநிதியாக தமிழக சபாநாயகர் ஆவுடையப்பன் கலந்து கொள்கிறார். மொத்தம் 18 நாட்கள் அவர் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
இதற்காக அவர் நேற்று காலை 4.35 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் நைரோபிக்கு புறப்பட்டுச் சென்றார். சபாநாயகரை அமைச்சர் மைதீன்கான், நெல்லை கலெக்டர் ஜெயராமன், முன்னாள் அமைச்சர் இந்திரா குமாரி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
மாநாட்டிற்கு பின்னர் வரும் 19, 20 தேதிகளில் ஸ்பெயின் நாட்டிலும், 22, 23 தேதிகளில் கிரீஸ் நாட்டிலும், 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை அமெரிக்காவிலும், 27-ம் தேதி கனடாவிலும், 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நான்கு நாட்கள் இங்கிலாந்திலும் அவர் சுற்றுபயணம் மேற்கொள்கிறார்.
தனது 18 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அக்டோபர் 1-ம் தேதி லண்டனில் இருந்து விமானம் மூலம் புறப்படும் ஆவுடையப்பன் 2-ம் தேதி சென்னை வந்தடைகிறார்












Click it and Unblock the Notifications