நெல்லை அரசு மருத்துவமனை ஊழியர்கள் 600 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் 600 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களுக்கான மருந்துகள் இன்னும் வரவில்லை.

தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் 620 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பன்றிக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க தடுப்பூசிகளைச் சலுகை விலையில் மக்களுக்குப் போடுமாறு சுகாதாரத் துறை செயலாளர் சுப்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி முதல் கட்டமாக மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் நோஷோவேக் என்ற தடுப்பு மருந்து ரூ.150 சலுகை கட்டணத்திலும், வேக்சி ப்ளூ எக்ஸ் என்ற தடுப்பூசி ரூ.250 கட்டணத்திலும் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நெல்லை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்காக பிரத்யேக வார்டு மற்றும் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் மூலம் பன்றிக் காய்ச்சல் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை ஊழியர்கள் 600 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+