குமரிக் கடலில் கடற்படை தொடர்ந்து 3 நாள் ஆய்வு
நித்திரவிளை: குமரிக் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவும் வாய்ப்பு உள்ளதா என இந்திய கடற்படை கப்பல் ஷாருக் நேற்று முன்தினம் நித்திரவிளை அருகே ஆய்வு நடத்தியது.
மும்பையி்ல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு கடலோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே எடப்பாடு கடற்கரைப் பகுதியில் நேற்று காலை ஒரு கப்பல் திடீரென வந்து நின்றது.
கரையில் இருந்து சுமார் அரை கிலோ மீ்ட்டர் தொலைவில் நின்ற கப்பலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இன்ஸ்பெக்டர் ஜேசுராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விசாரணையில் அது இந்திய கடற்படைக்கு சொந்தமான ஷாருக் கப்பல் என்பது தெரிய வந்தது.
அந்த கப்பலில் 15 கடற்படை வீரர்கள் கர்நாடக மாநிலம் கார்வாரில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் கடற்கரை பகுதிகளை சர்வே எடுத்து தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்ய வந்துளளனர். கப்பலில் வந்துள்ள கடற்படை வீரர்கள் கடலின் ஆழம், அலையின் தன்மை போன்றவற்றை நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.
ஆய்வு இன்று வரை தொடர்ந்து நடக்கிறது.












Click it and Unblock the Notifications