கரூரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: 15 நாளுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம்
கரூர்: கரூர் நகராட்சி மற்றும் இனாம் கரூர் நகராட்சி பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர், பசுதிபாளையம், திருமாநிலையூர், லைட்ஹவுஸ் கார்னர், மாவடியான் கோவில் தெரு, இனாம் கரூர் நகராட்சிக்கு உட்பட்ட இராமனுஜம் நகர், வெங்கமேடு, குளத்துப்பாளைம் ஆகிய பகுதிகளில் மாத்திற்கு இரு முறை மட்டுமே பொது ம்ககளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
இனாம் கரூரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகின்றது. வசதி படைத்தவர்கள் லாரியில் தண்ணீர் வாங்கி பஞ்சத்தைப் போக்கிக் கொள்கின்றனர். அன்றாட உணவிற்கே போராடும் ஏழை மக்கள் தண்ணீருக்காக தினசரி அல்லாடி வருகின்றனர்.
இது குறித்து கரூர் நகர மன்றத் தலைவர் சிவகாமசுந்தரி மற்றும் இனாம் கரூர் நகர மன்றத் தலைவர் கவிதாவிடமும் பொது மக்கள் பல முறை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
மாநகராட்சியாக்க கோரிக்கை:
இந்நிலையில் இந்த இரு நகராட்சிகள் உள்பட சில பஞ்சாயத்துகளையும் சேர்த்து கரூரை மாநகராட்சியாக்க கரூர் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்படடுள்ளது.












Click it and Unblock the Notifications