ஐ.நா. சபை கூட்டத்தில் ராஜபக்சே!: பான்-கி-மூனுடன் சந்திப்பு!!

ஐ.நா. பொது சபையில் 65வது மாநாடு கடந்த 14ம் தேதி தொடங்கியது. வரும் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்து பொது விவாதங்கள் நடக்கவுள்ளன. இதில் பல நாட்டுத் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ராஜபக்சே தலைமையிலான உயர் மட்டக்குழு நியூயார்க் சென்றுள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரின்போது நடந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது தொடர்பான மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா. 3 பேர் குழுவை அமைத்தது.
இந்தக் குழு அமைக்கப்பட்டதற்கு ராஜபக்சே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் மற்றும் ராஜபக்சே இடையே மோதலும் நடந்தது.
இந்த மூவர் குழு நேற்று முதல் தனது விசாரணையை துவக்கியுள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ள நிலையில் ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க ராஜபக்சே சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் பான்-கி-மூனையும் சந்திப்பார் என்று தெரிகிறது.
மூவர் குழு அமைக்கப்பட்ட பின் ஐ.நா. பொதுச் செயலாளரை ராஜபக்சே சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.












Click it and Unblock the Notifications