அயோத்தி வழக்கில் மத்திய அரசும் இணைய வேண்டும்-பாஜக
லக்னெள: அயோத்தி வழக்கில் மத்திய அரசும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று பாஜக கோரியுள்ளது.
இது குறித்து அக் கட்சியின் துணைத் தலைவர் வினய் கட்டியார் கூறுகையில்,
மத்திய அரசு உண்மையிலேயே மத நல்லிணக்கத்தை விரும்பினால் அயோத்தி வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.
அரசியல் கட்சிகள் கூடி விவாதித்து அயோத்தி பிரச்சனையை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளலாம் என அலகாபாத் உயர் நீதிமன்றம் யோசனை வழங்கியுள்ளது. இந்த ஆலோசனை வரவேற்கத்தக்கது.
நீதிமன்றம் அளித்துள்ள இந்த வாய்ப்பை மத்திய அரசு நழுவ விடக்கூடாது. அதை சரியாகப் பயன்படுத்தி இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்க்க முயற்சி எடுக்க வேண்டும்.
அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாகவுள்ளது. அதேசமயம் நல்லிணக்கமான சூழலில் அங்கு ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்றும் விரும்புகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications