For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பள்ளி எரி்ப்பு-நாளை தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் மூடல்

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில்தனியார் பள்ளிக்கூடம் தீவைத்து எரிக்கப்பட்டதைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிக்கூடங்களை போராட்டம் நடத்த தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள அண்ணா அறிவகம் பள்ளி பிளஸ்-1 மாணவர் சுரேஷ் கடந்த திங்கட்கிழமை அதே பள்ளி பஸ் மோதி பலியானார். இதைத் தொடர்ந்து மூண்ட கலவரத்தில் பள்ளி தீ வைத்து எரிக்கப்பட்டது.

இதற்குக் கண்டனம் தெரிவித்து மாவட்டம் முழுவதும் உள்ள 187 தனியார் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் மூடப்பட்டன. இதேபோல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளும் மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து நேற்று கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொது செயலாளர் நந்தகுமார் பின்னர் கூறுகையில்,

போச்சம்பள்ளி அண்ணா அறிவகம் பள்ளி எரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் அனைத்து நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் அனைத்தும் மூடப்படும் என அறிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X