அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் கூடும் சட்டசபை
சென்னை: தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் அக்டோபர் மாத கடைசியிலோ அல்லது நவம்பர் முதல் வாரத்திலோ கூட்டப்படும் என்று தெரிகிறது.
சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடந்தது. இந் நிலையில் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கூடும்போது, சட்ட மேலவையும் அமைக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையி்ல் 6 மாதத்துக்கு ஒருமுறை சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்ற நிலையில் நவம்பர் மாதம் 2வது வாரத்துக்குள் தமிழக சட்டசபை குளிர்கால கூட்டத் தொடருக்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது.
மேலவை அமைய தாமதம் ஆவதால் சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் அக்டோபர் மாத கடைசியில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என்று தெரிகிறது.
மேலவைக்கு தேர்தல் நடத்தப்பட்டு ஜனவரி மாதத்தில் அந்த அவை கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்பு கூடும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மேலவையும் தயாராகிவிடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications