முன்னாள் அதிமுக அமைச்சர் அன்வர்ராஜா மருமகள் தற்கொலை
ராமநாதபுரம்: முன்னாள் அமைச்சரும் அதிமுக பிரமுகருமான அன்வர் ராஜாவின் மருமகள் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் அன்வர் ராஜாவை கைது செய்யக் கோரி மருமகள் வீட்டார் வலியுறுத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அன்வர் ராஜாவின் மகன் முஜிபூர் ரகுமான் ராமநாதபுரத்தில் பல்பொருள் அங்காடி வைத்துள்ளார். இவரது மனைவி ரகமத் நிஷா. இருவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இந் நிலையில் ரகமத் நிஷா நேற்றிரவு ராமநாதபுரத்தில் உள்ள அன்வர் ராஜாவின் வீட்டில் விஷம் குடித்து கவலைக்கிடமான நிலையில் கிடந்தார். உடனடியாக அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தத் தற்கொலைக்கு அன்வர் ராஜாவும், அவரது மகன் முஜிப் ரகுமானும் தான் காரணம் என்று நிஷாவின் சகோதரி நூர் நிஷா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மேலும் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று கோரியுள்ள ரகமத்தின் உறவினர்கள், கைது செய்யும் வரை சடலத்தை வாங்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications