இந்திய ஏற்றுமதி 22.5% அதிகரிப்பு: வர்த்தக பற்றாக்குறையும் அதிகரிப்பு
டெல்லி: கடந்த ஆகஸ்டு மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 22.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி ரூ.76,500 கோடியாக உயர்ந்துள்ளது.
இது குறித்து மத்திய வர்த்தகத்துறை செயலாளர் ராகுல் குல்லார் கூறுகையில்,
ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் இறக்குமதியும் 32.2 சதவீதம் அதிகரித்து ரூ.1,36,600 கோடியாக உயர்ந்துள்ளது. இறக்குமதி மிகவும் அதிகரித்துள்ளதால் வர்த்தக பற்றாக்குறை கடந்த 23 மாதங்களில் இல்லாத அளவிற்கு ரூ.60,100 கோடியாக அதிகரித்துவிட்டது.
(ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகரிக்கும்போது, வர்த்தக பற்றாக்குறை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பதால், டாலருக்கான தேவை அதிகரித்து, இந்திய ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது)
இதை சமாளிக்க மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிகிறது.
பொருளாதார வளர்ச்சி வேகத்தில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அடிப்படையில் ஆசியாவின் 3வது நாடாகவும் திகழ்வது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications