For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக்.குக்கு 20 மில்லியன் டாலர் வெள்ள நிவாரண உதவி-ஐ.நா.விடம் அளித்தது இந்தியா

By Staff
Google Oneindia Tamil News

Pakistan flood
ஐ.நா.: பாகிஸ்தான் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக முதல் கட்டமாக 20 மில்லியன் டாலருக்கான காசோலையை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனிடம் இந்தியா அளித்துள்ளது.

பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். பல லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். இதையடுத்து உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவிகளை வாரி வழங்குகின்றன. இந்தியாவும் நிதியுதவி உள்ளிட்டவற்றை அளிக்க முன்வந்தது.

ஆனால் நேரடியாக அவற்றைப் பெற்றுக் கொள்ள பாகிஸ்தான் தயங்கியது. ஐ.நா. மூலம் கொடுத்தால் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தது. இதையடுத்து ஐ.நா. மூலம் இந்தியா உதவிகளை அளிக்கத் தொடங்கியுள்ளது.

அதன்படியே முதல் கட்டமாக 20 லட்சம் டாலர் நிதியுதவியை பான் கி மூனிடம் இந்தியா கொடுத்தது. இதைப் பெற்றுக் கொண்ட பான் கி மூன் கூறுகையில், இந்த உதவி நிச்சயம் பாதிப்புக்குள்ளான பாகிஸ்தானியர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றார்.

ஐ.நா.வுக்கா இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், இயற்கைச் சீற்றங்களுக்கு தேசிய எல்லைகள் கிடையாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இதுபோன்று உதவுவது முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில்தான் என்றார்.

இந்த சந்திப்பின்போது பாகிஸ்தான் தூதர் அப்துல்லா ஹூசேன் ஹாரூனும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X