For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் மும்பை தாக்குதல் போல நடந்தால் இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க நிபுணர்

Google Oneindia Tamil News

Mumbai Attack
வாஷிங்டன்: மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலைப் போல மீண்டும் நடந்தால், இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுத யுத்தம் மூளும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த தீவிரவாத எதிர்ப்பு நிபுணர் பீட்டர் பெர்ஜன் எச்சரித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கை ஒன்றை அமெரிக்க நாடாளுமன்ற உள்நாடு மற்றும் பாதுகாப்பு கமிட்டியிடம் சமர்ப்பித்துள்ளார் பீட்டர்.

மீண்டும் மும்பை பாணி தாக்குதல் இந்தியாவில் நடத்தப்பட்டால் இந்தியா அமைதியாக இருக்காது. பாகிஸ்தான் மீது அது போர் தொடுக்கும். இந்தப் போர் அணு ஆயுத யுத்தமாகவும் மாறும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத குழுக்களை குறி வைத்தே இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்றாலும் பாகிஸ்தான் போரை வேறு பாதைக்குக் கொண்டு போய் முழு அளவிலான போராக மாற்றி விடும் என்றும் பீட்டர் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், மும்பை பாணி தாக்குதல் நடக்கக் கூடாது என்று அனைவரும் கருதுவதே இந்தப் போரைத் தடுக்க ஒரே வழி. காரணம், இந்தியா, பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் மூண்டால் அது அணு ஆயுத யுத்தமாக மாறும் என்பதே இந்தக் கவலைக்குக் காரணம்.

இந்தப் போர் தெற்காசிய சூழ்நிலையை வெகுவாக மாற்றி விடும். மும்பையில் நடந்த தாக்குதலின்போது இந்தியர்கள் மிக மிக ஆவேசமாக இருந்தனர், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் அபரிமிதமாக இருந்தது. ஆனால் இந்திய அரசு மிகவும் பொறுமை காத்தது, அமைதி காத்தது. ஆனால் மீண்டும் அப்படி ஒரு தாக்குதல் நடந்தால் இந்தியா அமைதி காக்கும் எனக் கூற முடியாது.

மீண்டும் மும்பை பாணி தாக்குதல் நடந்தால் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இந்தியா மீது விழும். அமெரிக்காவுக்கும் இது மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது. வரும் ஆண்டுகளில் மும்பை 2 தாக்குதல் நடந்து விடாமல் தடுக்க வேண்டிய கடமையும் அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்துள்ளது என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X