விஜய்காந்துக்கு 150 தொகுதியா கொடுக்க முடியும்?: ராஜ கண்ணப்பன் கேள்வி

அதிமுகவிலிருந்து பிரிந்து தனிக் கட்சி கண்டு, பின்னர் திமுகவில் இணைந்து, இப்போது அதிமுகவுக்குப் போய்விட்ட கண்ணப்பன் சிவகாசியில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசுகையில்,
இடைத்தேர்தல் முடிவுகளை எல்லாம் அளவீடாக கருதக் கூடாது. பொது தேர்தலில் கணக்கு வேறு மாதிரியாகவே இருக்கும்.
கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக இடையிலான ஓட்டு வித்தியாசம் வெறும் 14 லட்சம் தான். ஒரு தொகுதிக்கு 5,000 ஓட்டும், பூத்திற்கு 20 முதல் 25 ஓட்டுக்களும் தான் வித்தியாசம் இருந்தது. இதில் பூத்துக்கு மேலும் 15 ஓட்டுக்களைப் பெற்றால் போதும் நாம் ஆட்சியை பிடித்து விடுவோம்.
30 சீட், 40 சீட்டுக்கு எலாலம் எப்படி கூட்டணி வைக்க முடியும் என்று சிலர் (விஜய்காந்த்) பேசுகின்றனர். அவர்களுக்கு என்ன 150 தொகுதியா கொடுக்க முடியும்?.
ஓட்டு வங்கி பலத்தின்படியும் விகிதாச்சாரப்படியும்தான் தொகுதி ஒதுக்க முடியும். 5 சதவீத ஓட்டு வாங்கினால் 17 தொகுதி, காங்கிரஸ் மாதிரி 12 சதவீத ஓட்டு வாங்கினால் 45 முதல் 50 சீட்டுக்கள் வரை தரலாம்.
காங்கிரஸ் கட்சியின் கொத்தடிமையாக உள்ள கருணாநிதி மாநில உரிமைகளை விட்டு கொடுத்து வருகிறார்.
புரட்சித் தலைவியைப் பொறுத்தவரை கூட்டணியை அவர் எப்போதும் அவமதித்ததில்லை. சரியான நேரத்தில் அவர் சரியான முடிவெடுப்பார் என்றார்.












Click it and Unblock the Notifications