காஷ்மீரில் மீண்டும் கலவரம் வெடித்தது-ஒருவர் பலி

Subscribe to Oneindia Tamil

Kashmir Violence
ஸ்ரீநகர்: கடந்த ஏழு நாட்களாக ஊரடங்கின் கீழ் உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று மீண்டும் கலவரம் வெடித்தது. துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.

ரம்ஜானையொட்டி ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் ரம்ஜான் முடிந்த உடனேயே மீண்டும் காஷ்மீரில் கலவரம் வெடித்தது. இதையடுத்து பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கின் கீழ் கொண்டு வரப்பட்டது. அன்று முதல் பள்ளிக்கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. இருப்பினும் அவ்வப்போது கலவரம் வெடித்தபடியே உள்ளது.

வெள்ளிக்கிழமை 3 பேர் கலவரத்தில் உயிரிழந்தனர். சோபியான் பகுதியில் ஒரு போலீஸ்காரர் வீட்டை சிலர் தாக்க முயன்றபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் வெடித்த கலவரத்தில் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

கடந்த 3 மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் காஷ்மீர் கலவரத்திற்கு இதுவரை 90 பேர் உயிரிழந்துள்ளனர். கல்வி நிறுவனங்களில் வகுப்புகள் முற்றிலும் முடங்கிப் போயுள்ளன. மாணவ, மாணவியரின் படிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வர்த்தகம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+