போலி பாஸ்போர்ட்டுடன் ஈரான் தம்பதி கொச்சி விமான நிலையத்தில் கைது
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கொச்சி விமான நிலையத்தில் ஈரான் நாட்டைச் சேர்ந்த தம்பதி போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டனர்.
கொச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் பாரி்ஸ் செல்லும் சில்க் ஏர்வேஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அதில் செல்வதற்காக ஒரு இளம் தம்பதியினர் வந்தனர். அவர்களின் பாஸ்போர்ட் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் இந்தியா வந்ததற்கான எந்த ஆவணங்களும் பாஸ்போர்ட்டில் இல்லை என்பது தெரிய வந்தது. மேலும், அவர்கள் இருவரும் ஈரான் நாட்டைச் சேர்ந்த முகமது கைத், மகஜான் எனத் தெரிந்தது.
கோவாவில் தங்கள் பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாகவும், மும்பை சென்று அங்கு ஒரு ஏஜென்டிடம் ரூ. 3 ஆயிரம் கொடுத்து போலி பாஸ்போர்ட் வாங்கியாதகவும் அவர்கள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications