Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உத்தரகன்ட் திடீர் மழைக்கு 63 பேர் பலி: கங்கையில் வெள்ளம்

Subscribe to Oneindia Tamil

டோராடூன்: உத்தரகன்டில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்த திடீர் மழை, கன மழை, நிலச் சரிவுகளில் பலியானோர் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது.

நைனிடாலில் 11 பேரும், ஹரித்வாரில் 7 பேரும், பௌரியில் 3 பேரும் பலியாகினர்.

அபாய அளவை விட 2 மீட்டர் அளவிற்கு கங்கை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் புனிதத் தலமான ஹர்-கி-புஆரி உள்பட்ட மாவட்டத்தின் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. திடீர் மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் 7 பேர் இன்னும் இடிந்த வீடுகளின் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து அனைத்து பள்ளிகளையும் 3 நாட்களுக்கு மூடுமாறு இன்று மாநில அரசு உத்தரவுட்டுள்ளது.

இந்நிலையில் உத்தரகன்ட் முதல்வர் ரமேஷ் பொக்ரியல் நிஷங்க் பஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜிடம் உதவி கேட்டுள்ளார். இதையடுத்து சுஷ்மா பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை சமாளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+