கசாப் அப்பீல் மனு தாக்கல் செய்யும் வரை காத்திருக்க முடியாது-மும்பை உயர்நீதிமன்றம்
மும்பை: மரண தண்டனையை எதிர்த்து அஜ்மல் கசாப் அப்பீல் மனு தாக்கல் செய்யும் வரை காத்திருக்க முடியாது. அக்டோபர் 11 அல்லது 18ம் தேதி மரண் தண்டனையை உறுதி செய்யும் வாதம் தொடங்கும் என்று மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
மும்பை தீவிரவாத வழக்கில் கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவர் அப்பீல் செய்யப் போவதாக கூறியுள்ளார். ஆனால் இதுவரை செய்யவில்லை.
குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்படி, விசாரணை நீதிமன்றத்தில் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும். இதற்கு வசதியாக தனிக் கோர்ட் பிறப்பித்த தீர்ப்பு உயர்நீதிமன்றத்திற்காக தானாகவே போய் விட்டது.
இந்த நிலையில், மரண தண்டனையை உறுதி செய்வதற்கான விசாரணை நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான பெஞ்சு முன்பாக நேற்று நடந்தது. அப்போது கசாப்பின் வக்கீல் பர்ஹானா ஷாவிடம் நீதிபதி ரஞ்சனா தேசாய் கூறுகையில்,
அப்பீல் செய்வதற்கான 60 நாள் அவகாசம் ஏற்கனவே முடிந்து விட்டது. மரண தண்டனையை உறுதி செய்வதற்கான விசாரணையை வரும் அக்டோபர் 11 அல்லது 18-ந் தேதி தொடங்கி தினந்தோறும் நடத்துவோம். இந்த காலவெளிக்குள் கசாப் அப்பீல் செய்யலாம். இனியும் காத்திருக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications