For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் திமுக-நிர்வாகிகளுடன் கருணாநிதி ஆலோசனை

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: தமிழக சட்டசபைக்கு நரும் மே மாதம் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் திமுக தனது பணிகளைத் தொடங்கிவிட்டது.

திமுக தலைவரான முதல்வர் கருணாநிதி நாளை முதல் மாவட்டவாரியாக நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடத்துகிறார்.

நாளை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தொடங்கும் இந்தக் கலந்தாய்வில் முதலில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்ட, மாநகர ஒன்றிய நகர, பகுதி கழக நிர்வாகிகளுடன் கருணாநிதி தனித்தனியே ஆலோசனை நடத்துகிறார்.

28ம் தேதி தர்மபுரி வடக்கு, தர்மபுரி தெற்கு மாவட்டம், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளுடனும், 29ம் தேதி கரூர், திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடனும், 30ம் தேதி சேலம், ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடனும்,

அக்டோபர் 1ம் தேதி சிவகங்கை, விருதுநகர், 4ம் தேதி மதுரை புறநகர், மதுரை மாநகர், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடனும்,

6ம் தேதி திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், 7ம் தேதி பெரம்பலூர், அரியலூர், 8ம் தேதி நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடனும்,

9ம் தேதி தஞ்சை, கடலூர், 11ம் தேதி திருநெல்வேலி விழுப்புரம், திருவண்ணாமலை, 12ம் தேதி வேலூர், காஞ்சீபுரம், 13ம் தேதி கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல்,

14ம் தேதி திருவள்ளூர், தென் சென்னை. வட சென்னை மாவட்ட நிர்வாகிகளுடனும் தனித்தனியே ஆலோசனை நடத்துகிறார்.

இதையொட்டி திமுக பொதுச் செயலாளர் அமைச்சர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், இக்கூட்டங்களில் மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய நகர, பகுதி கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொள்வர்.

கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் ஒன்றிய நகர பகுதி செயலாளர்கள் தங்கள் பகுதியில் இது வரை நடைபெற்ற பொதுக் கூட்டங்கள் பற்றிய விவரங்களையும், 'மினிட்' புத்தகத்தையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X