For Daily Alerts
Just In
திருவனந்தபுரம் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார் துரைமுருகன்
சென்னை: நெஞ்சு வலி காரணமாக திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைமுருகன் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சென்னை திரும்பினார்.
நாகர்கோவிலில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக அங்கு சென்றிருந்தார் துரைமுருகன். பின்னர் முதல்வர் உள்ளிட்டோர் விழாவை முடித்துக் கொண்டு தைக்காடு கேரள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினர்.
அப்போது நள்ளிரவில் துரைமுருகனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை கிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை கேரள அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் நேற்று முற்பகலில் துரைமுருகன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன் பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
Story first published: Wednesday, September 22, 2010, 11:39 [IST]