அயோத்தி தீர்ப்பு: இந்து மத அமைப்புகள் அமைதி காக்க வேண்டும்- இராமானந்தா சுவாமிகள்
கோவை: அயோத்தி நிலம் தொடர்பான தீர்ப்பையொட்டி இந்து மத அமைப்புகள் அமைதி காக்க வேண்டும் என்று ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த இராமானந்தா சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைதி வேண்டி நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அவர் கோவை தண்டுமாரியம்மன் கோயிலில் நிருபர்களிடம் பேசுகையில்,
நமது நாடு புண்ணிய பூமி, மோட்ச பூமி, கர்ம பூமி. 2008ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி, விவேகானந்தர் பிறந்த நாளான்று ராமேஸ்வரத்திலிருந்து பாதயாத்திரையாகப் புறப்பட்டு, அனைத்து மாநிலங்களுக்கும் சென்று, தற்போது தமிழகத்தில் பாதயாத்திரை மேற்கொண்டிருக்கிறேன்.
வரும் ஜனவரி 12ம் தேதி ராமேஸ்வரத்தில் பாதயாத்திரையை நிறைவு செய்ய இருக்கிறேன்.
தர்மத்தை ஸ்தாபிக்க ஆதிசங்கரர் நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு, தெற்கே சிருங்கேரி மடம் (யஜுர் வேதம்), மேற்கே துவாரகா மடம் (ரிக் வேதம்), வடக்கே ஜோதிர் மடம் (சாம வேதம்), கிழக்கே கோவர்தன மடம் (அதர்வண வேதம்) என நான்கு மடங்களை ஸ்தாபித்தார். வேதங்கள் நாட்டின் எல்லைகளாக இருக்கின்றன.
அயோத்தி நிலம் தொடர்பான தீர்ப்பு 24ம் தேதி வெளிவர உள்ளது. இந்தத் தீர்ப்பையொட்டி, இந்து அமைப்புகள் அமைதி காக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications