தமிழத்தில் 72 சதவீத குழந்தைகளுக்கு ரத்த சோக நோய்

6 முதல் 35 மாத வயதுடைய குழந்தைகளின் கணக்கு இது. இது கடந்த 98-99ல் 69 சதவீத குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று தேசதிய குடும்ப ஆரோக்கிய சர்வே இதைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் பொது சுகாதார இயக்குநர் பொற்கைப் பாண்டியன் கூறுகையில், அனீமியா எனப்படும் ரத்த சோகையை நோயைக் குணப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கர்ப்பிணிப் பெண்களுக்கு ரத்த சோகை வராமல் தடுக்கும் திட்டம், விட்டமின் ஏ புராபைலாக்ஸிஸ் திட்டம், இளம் பிராயத்தினருக்கான ரத்த சோகைத் தடுப்புத் திட்டம் உள்ளிட்டவை அதில் சில.
தேசிய அயோடின் பற்றாக்குறை தடுப்புத் திட்டம் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்காக அமல்படுத்தி வருகிறோம்.
மேலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கிடையே அதிகரித்து வரும் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications