இன்றைக்கே வந்திருக்கக்கூடாதா?-அயோத்தி தீர்ப்பு தள்ளிப் போனதால் மக்கள் அதிருப்தி
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அயோத்தியில் உள்ள சாகெத் டிகிரி கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் அனில் சிங் கூறியதாவது,
சாலைகளில் போக்குவரத்து எப்பொழுதும் போல் செல்கிறது. கடைகளும், சந்தைகளும் திறந்துள்ளது. ஆனால், மக்கள் மத்தியில் இருக்கும் பதட்டம் குறையவில்லை. இன்றே தீர்ப்பளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
எந்த சமுதாயத்தினருக்கும் இடையில் சண்டை எதுவும் இல்லாதபோதிலும், குவிக்கப்பட்டிருக்கும் போலீஸ் படையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் தங்கியிருக்கும் போலீசாரால் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள். ஆனால் அயோத்தியிலோ மகேசனுக்கே தீர்ப்பு என்ற நிலை ஏற்பட்டிருப்பது விந்தையானதுதான்.












Click it and Unblock the Notifications