காமன்வெல்த் போட்டிகளை தள்ளி வைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Subscribe to Oneindia Tamil

JawaharlalNehru Stadium
டெல்லி: தேசிய அவமானம் என்று கெட்ட பெயர் எடுத்துள்ள காமன்வெல்த் போட்டிகளை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் காமன்வெல்த் போட்டிக்காக பெரும் தொகையையும், அரசு இயந்திரத்தையும் செலவழிப்பத்தை விட்டு விட்டு வெள்ள நி்வாரணப் பணிகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இதுதொடர்பாக அஜய் அகர்வால் என்ற அந்த வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவில், காமன்வெல்த் போட்டி தேசிய அவமானம் என்ற பெயரை வாங்கியுள்ளது. இந்தப் போட்டியால் இந்தியாவுக்கு உலகஅரங்கில் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது.

எனவே இந்தப் போட்டியை குறைந்தது ஒரு மாதத்திற்குத் தள்ளி வைக்க வேண்டும். அப்போதுதான் நாட்டை அவப் பெயரிலிருந்து மீட்க முடியும்.

மேலும் போட்டியைத் தள்ளி வைப்பதன் மூலம் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பிற பகுதிகள் குறித்து அரசு தீவிர அக்கறை செலுத்த முடியும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு உதவுவதில் அரசு அக்கறை செலுத்த வேண்டும். அதற்காக அரசு இயந்திரத்தை செலவிட வேண்டும்.

ஆனால் சுரேஷ் கல்மாடி அன்ட் கம்பெனியினரால் நாட்டுக்கு பெரும் கேவலம் ஏற்பட்டுள்ளதோடு, அரசையும் அவர்கள் தங்களது குழப்பத்திற்குள் இழுத்துக் கொண்டு போய் மக்கள் நல பணிகளை செய்ய விடாமல் சீர்குலைத்து வருகின்றனர்.

கல்மாடியை உடனடியாக போட்டி அமைப்புக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அங்கு நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+